Announcement

Collapse
No announcement yet.

தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம்

    1#5f. ஹயக்ரீவன் (6)

    பெருவலிவுடைய ஹயக்ரீவன் என்ற அசுரன்
    அரும் தவம் புரிந்தான் சரஸ்வதிநதித்தீரத்தில்.
    துறந்தான் உலக போகங்கள் அனைத்தையும்;
    மறந்தான் அன்னம், பானம், ஆஹாராதிகளை.
    ஜபித்தான் என் ஏகாக்ஷர மந்திரத்தைவிடாது;
    துதித்தான் என் தாமச சக்தியைத்தியானித்து!
    சர்வாலங்கிருத பூஷிதையாக சிங்கத்தின் மீது
    கற்பனைசெய்தது போலவே காட்சி அளித்தேன்
    “முத் தொழிலுக்கும் காரணமான தேவி!
    பக்தருக்கு அருள் செய்வதில் சமர்த்திநீ.
    பஞ்ச தன்மாத்திரைகளுக்குக் காரணம் நீ !
    பஞ்ச பூதங்களுக்குக் காரணம் ஆனவள் நீ!
    பஞ்ச ஞானேந்திரியங்களும் நீயே தாயே!
    பஞ்ச கர்மேந்திரியங்களும் நீயே ” என,
    “விரும்பும் வரத்தைக் கேள் ஹயக்ரீவா!
    விரும்பிய வண்ணமே அருள்கின்றேன்!”
    “மரணம் என்பது ஏற்படக் கூடாதுஎனக்கு
    சரணம் அடைய வேண்டும் தேவர்என்னிடம்.
    அழியாத தன்மையைத் தந்தருளும் தேவி!” என்று
    மொழிந்தான் தான் கோரும் வரங்களைஅசுரன்.


    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
Working...