217.மதியால்
217
கருவூர்
தனதானத் தனதான தனதானத் தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் பெருமாளே
217
கருவூர்
தனதானத் தனதான தனதானத் தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் பெருமாளே

சுருக்க உரை
என் புத்தியைக் கொண்டு ஒரு பேரறிவாளி ஆகி, நான் நன்னெறியையே பற்றி மேலோனாகி, சிவ ஞானம் என் மனதில் ஊன்றுவதாகி, யோக வழியை நான் பற்றும்படி அருள் புரிவாயாக.
என் செல்வமே. அழிவில்லாத பொருளே, என் தியானப் பொருளே. நன்மை தரும் கடவுளே, என் புகலிடமே, யாவராலும் புகழப்படும் மேலான செவ்வேளே, கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே, எனக்குப் பர யோகம் தந்து அருள்வாய்.
என் புத்தியைக் கொண்டு ஒரு பேரறிவாளி ஆகி, நான் நன்னெறியையே பற்றி மேலோனாகி, சிவ ஞானம் என் மனதில் ஊன்றுவதாகி, யோக வழியை நான் பற்றும்படி அருள் புரிவாயாக.
என் செல்வமே. அழிவில்லாத பொருளே, என் தியானப் பொருளே. நன்மை தரும் கடவுளே, என் புகலிடமே, யாவராலும் புகழப்படும் மேலான செவ்வேளே, கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே, எனக்குப் பர யோகம் தந்து அருள்வாய்.
விளக்கக் குறிப்புகள்
நிதியே...
நிதி ஒப்பானை நிதியில் கிழவனை...
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.. . திருநாவுக்கரசர் தேவாரதம்.
நிதியினைப் பவளத் தூணை
நெறியினால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டுமுன் அண்டமாளும்).................. திருமங்கை ஆழ்வார்,திருகுறுத்தாண்டகம்
கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.......... .கந்தர் அநுபூதி .
நிதியே...
நிதி ஒப்பானை நிதியில் கிழவனை...
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.. . திருநாவுக்கரசர் தேவாரதம்.
நிதியினைப் பவளத் தூணை
நெறியினால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக்
கண்டுமுன் அண்டமாளும்).................. திருமங்கை ஆழ்வார்,திருகுறுத்தாண்டகம்
கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.......... .கந்தர் அநுபூதி .
Last edited by soundararajan50; 21-01-18, 07:11.