207.வாலவயதாகி
207
இராமேசுரம்
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன தானதன
தானதன் தானதன தானதன தானதன தனதான
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு பொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள் மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமெனெ நாறியுட லழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதினை காவில்மண மேவுபுகழ் மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழ
மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவே
யோதமறை ராமெசுர மேவுகும ராவுமரர் பெருமாளே
207
இராமேசுரம்
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன தானதன
தானதன் தானதன தானதன தானதன தனதான
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு பொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள் மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமெனெ நாறியுட லழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதினை காவில்மண மேவுபுகழ் மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழ
மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவே
யோதமறை ராமெசுர மேவுகும ராவுமரர் பெருமாளே

சுருக்க உரை
கட்டிளமை வயதை அடைந்து, மன்மதன் போல் அழகு உடையவனாகி, பல வாணிபத் தொழில்களை மேற்கொண்டு,பொருள் தேடி, மயக்க அறிவைப் பெற்று, விலை மாதர்களுடன் வீண் காலம் கழித்து, பயனற்ற வாழ்க்கையை விரும்பி,அங்ஙனமே பல நாள் கழிய, உடலில் தோல் சுருங்கி, மயிர் நரைத்து, கால்கள் தடுமாறி, கண்கள் குடுடாகி, காது செவிடாகி, பசு, பதி, பாசம் என்னும் அறிவு வழிகள் யாவையும் மறைதலுற்று, பல வகையான பிணிகளால் பீடிக்கப்பட்டு,உடல் துர்நாற்றம் அடைந்து, நான் இறந்து படுவேனோ?
நான்கு முகங்களைக் கொண்ட பிரமன் எல்லாவற்றுகும் ஆதாரமாயுள்ள அரி ஓம் என்னும் சொல்லுக்குப் பொருள் கூற முடியாமல் விழிக்க, அவனுடைய தலையில் அழுந்தக் குட்டிய இளையோனே. கொன்றையைச் சடையில் தரித்த சிவபெருமானின் இடப் பாகத்தில் உறையும் பார்வதி பெற்ற மூத்த பிள்ளையாகிய கணபதி மகிழும் சகோதர நண்பனே. வள்ளி மலைக் காட்டில் தினைப் புனம் காத்த வள்ளியை மணம் புரிந்த மயில் வீரனே. கூச்சலிட்டு வந்த தாடகை மற்றும் பல இராவணனின் கூட்டங்களைப் போரில் அழித்தவனும், கையில் வில், சக்கரம், சங்கு இவைகளை ஏந்தியவனும், இலக்குமி வாசம் செய்யும் மார்பனும் ஆகிய திருமாலின் மருகனே. வேதங்கள் ஓதிப் புகழும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே. தேவர் பெருமாளே. தீ நெறியில் ஈடுபட்டு, உடல் கெட்டு நான் அழியலாமோ?
கட்டிளமை வயதை அடைந்து, மன்மதன் போல் அழகு உடையவனாகி, பல வாணிபத் தொழில்களை மேற்கொண்டு,பொருள் தேடி, மயக்க அறிவைப் பெற்று, விலை மாதர்களுடன் வீண் காலம் கழித்து, பயனற்ற வாழ்க்கையை விரும்பி,அங்ஙனமே பல நாள் கழிய, உடலில் தோல் சுருங்கி, மயிர் நரைத்து, கால்கள் தடுமாறி, கண்கள் குடுடாகி, காது செவிடாகி, பசு, பதி, பாசம் என்னும் அறிவு வழிகள் யாவையும் மறைதலுற்று, பல வகையான பிணிகளால் பீடிக்கப்பட்டு,உடல் துர்நாற்றம் அடைந்து, நான் இறந்து படுவேனோ?
நான்கு முகங்களைக் கொண்ட பிரமன் எல்லாவற்றுகும் ஆதாரமாயுள்ள அரி ஓம் என்னும் சொல்லுக்குப் பொருள் கூற முடியாமல் விழிக்க, அவனுடைய தலையில் அழுந்தக் குட்டிய இளையோனே. கொன்றையைச் சடையில் தரித்த சிவபெருமானின் இடப் பாகத்தில் உறையும் பார்வதி பெற்ற மூத்த பிள்ளையாகிய கணபதி மகிழும் சகோதர நண்பனே. வள்ளி மலைக் காட்டில் தினைப் புனம் காத்த வள்ளியை மணம் புரிந்த மயில் வீரனே. கூச்சலிட்டு வந்த தாடகை மற்றும் பல இராவணனின் கூட்டங்களைப் போரில் அழித்தவனும், கையில் வில், சக்கரம், சங்கு இவைகளை ஏந்தியவனும், இலக்குமி வாசம் செய்யும் மார்பனும் ஆகிய திருமாலின் மருகனே. வேதங்கள் ஓதிப் புகழும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே. தேவர் பெருமாளே. தீ நெறியில் ஈடுபட்டு, உடல் கெட்டு நான் அழியலாமோ?
1. தடியொடு திருயுறு நாளிற்....
தடி கொண்டு குரங்கெனவே நடந்து சொல்
...திருப்புகழ்,காராட.
2. ஆதாரம் உரையாத பிரமாவை....
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் கதிர்வேலா
... - திருப்புகழ், முகசந்தி
தூமறைக் கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓமெனப்படும் ஓரெழுத் துண்மையை உணரான்
மாமலர்ப் பெருங் கடவுளும் மயங்கினான் ...கந்த புராணம்
3. தாடகை சுவாகு.....
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை முறித்தா மாயவன் மருகோனே
...திருப்புகழ் தொடுத்தவாளெ.
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் மருகோனே.
. .திருப்புகழ் வேலைப்போல்
4. ஏழு மரம்.....
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
ழெழுவகை மராமரமு நிகரொன்றுமில்
வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட லவையேழும்
....திருப்புகழ், விடமும்வடி
5. பகன்..
கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு உருக் கொண்ட அரக்கன். இவன் கண்ணனால் வாய் பிளவுண்டு இறந்தான்.
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்கீண்டிட்ட பிள்ளை..
.பெரியாழ்வார்
6. கடலோடு....
பரவை பரவை கொல் பரவை வண அரி
பரவு மிமையவர் பெருமாளே ... .திருப்புகழ், குழலடவி.
விளக்கக் குறிப்புகள்
விராதன்... இவன் வீணை வாசிக்கும் தும்புரு என்னும் கந்தருவன். ரம்பையுடன் காம விகாரத்தால் ஊடல் கொள்ள குபேரன் இவனை அரக்கனாகும்படி சபித்தான்
தடி கொண்டு குரங்கெனவே நடந்து சொல்
...திருப்புகழ்,காராட.
2. ஆதாரம் உரையாத பிரமாவை....
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் கதிர்வேலா
... - திருப்புகழ், முகசந்தி
தூமறைக் கெலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓமெனப்படும் ஓரெழுத் துண்மையை உணரான்
மாமலர்ப் பெருங் கடவுளும் மயங்கினான் ...கந்த புராணம்
3. தாடகை சுவாகு.....
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை முறித்தா மாயவன் மருகோனே
...திருப்புகழ் தொடுத்தவாளெ.
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் மருகோனே.
. .திருப்புகழ் வேலைப்போல்
4. ஏழு மரம்.....
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
ழெழுவகை மராமரமு நிகரொன்றுமில்
வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட லவையேழும்
....திருப்புகழ், விடமும்வடி
5. பகன்..
கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு உருக் கொண்ட அரக்கன். இவன் கண்ணனால் வாய் பிளவுண்டு இறந்தான்.
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்கீண்டிட்ட பிள்ளை..
.பெரியாழ்வார்
6. கடலோடு....
பரவை பரவை கொல் பரவை வண அரி
பரவு மிமையவர் பெருமாளே ... .திருப்புகழ், குழலடவி.
விளக்கக் குறிப்புகள்
விராதன்... இவன் வீணை வாசிக்கும் தும்புரு என்னும் கந்தருவன். ரம்பையுடன் காம விகாரத்தால் ஊடல் கொள்ள குபேரன் இவனை அரக்கனாகும்படி சபித்தான்