186.சாந்தமில்
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன தனதான
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
மூண்டவி யாதசம யவிரோத
சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
தாந்துணை யாவரென மடவார்மேல்
ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
தோய்ந்துரு காவறிவு தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி போய்விடுவ தியல்போதான்
காந்தளி னானகர மான்தரு கானமயில்
காந்தவி சாகசர வணவேளே
காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
யாண்டகை யேயிபமின் மணவாளா
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
வேங்கட மாமலையி லுவைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு பெருமாளே
-186 திருவேங்கடம்
தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன தனதான
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
மூண்டவி யாதசம யவிரோத
சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
தாந்துணை யாவரென மடவார்மேல்
ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
தோய்ந்துரு காவறிவு தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
யான்தனி போய்விடுவ தியல்போதான்
காந்தளி னானகர மான்தரு கானமயில்
காந்தவி சாகசர வணவேளே
காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
யாண்டகை யேயிபமின் மணவாளா
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
வேங்கட மாமலையி லுவைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்டவெ றாதுதவு பெருமாளே
-186 திருவேங்கடம்

.
பார்க்க ஸ்வாமி என்றால் குமார ஸ்வாமியே
திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?
அக்டோபர் 2013ல் கிடைத்த செய்தி
திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா? என்று கேட்ட கேள்விக்கு
‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர்.
‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாகஇருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும்வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம்தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன் குறிஞ்சி நிலக்கடவுளல்லவா?’என்றார் கி.வா.ஜ.. ‘சரி! இதில் உன்னுடைய கருத்து என்ன?’ –என்று கேட்டார் பெரியவர்.
‘பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும்இருந்திருக்க வேண்டும். திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன்கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ.
ஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா?
‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப்படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி.அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது!
திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். முருகன்கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்குவாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. தொண்டை மண்டலத்தில், சக்திக்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும். ஒரு காலத்தில் திருப்பதி,தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. பின்,அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில்ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அதுஇருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும்சொல்வது பொருந்துகிறது’ என்றார்.
பிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில்கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்றுபணித்தார். அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். அதைகி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார். கி.வா.ஜ.வுக்கோ ஒரேபரவசம்.
ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின்பெரியவருக்கும் சாத்தப்பட்டது. இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதைஅவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்?
கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். சரியாக முப்பத்தி ஆறு முழங்கள்இருந்தது. இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். இதற்கென்றேநெசவாள கிராமம் ஒன்று உள்ளது. அவர்களுக்கும் காலம் காலமாகமுப்பத்தாறு முழம்தான் கணக்கு. கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம்இருப்பதைக் கூறினார். உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள்பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்திஆறு தானே?’ என்று கேட்டார். அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும்கணக்கில்… சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகேபுரிந்தது. அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாகபெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி தலமாக தொடரவில்லை என்கிறகேள்வியும் எழுந்தது. பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்:
‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாகமாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. கௌமார சக்திக்கு முருகனையும்,வைஷ்ண விக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். இதில்இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. அவ்வகையில் மாமனேபெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம்.இது ஒரு கோணம்.
அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம்ஜகத்’ என்பது வழக்கு. சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன்.அவனுக்குள் எல்லாமே அடக்கம். அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல்உள்ள ஆலயம்! அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன்அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன்
நன்றி; தீபம் இதழ்
சுருக்க உரை
மன அமைதி இல்லாத காமம் என்ற தீ ஒளியையும், ஆசை என்ற காற்றையும்,
வெகுவாகத் தோன்றிப் பின் அடங்காத சமய வாதங்களில் அழிந்து போகின்ற சாத்திர நூல் கடலையும், நீந்த முடியாமல் உலக மக்களே துணை எனக் கருதி,விலை மாதர்களின் இளமையிலும், கொங்கையிலும் மனம் உருகி, அறிவு தடுமாறி,நமன் என் உயிரைக் கவர்ந்து செல்ல வரும்போது நான் தனியாகச் செல்லுவது தகுதியோ?
காந்த மலர் போன்ற கையை உடைய மான் பெற்ற வள்ளியின் கணவனே,
யானை போற்றி வளர்த்த தேவசேனையின் மணவாளனே, வேந்தனே, குகனே, வடவேங்கட மலையில் உறைபவனே, வேண்டும் போதெல்லாம் வேண்டுவனவற்றை வெறுக்காமல் கொடுத்து உதவும் பெருமாளே. நான் துணை இன்றி யமனுடன் போதல் தகுமோ?
மன அமைதி இல்லாத காமம் என்ற தீ ஒளியையும், ஆசை என்ற காற்றையும்,
வெகுவாகத் தோன்றிப் பின் அடங்காத சமய வாதங்களில் அழிந்து போகின்ற சாத்திர நூல் கடலையும், நீந்த முடியாமல் உலக மக்களே துணை எனக் கருதி,விலை மாதர்களின் இளமையிலும், கொங்கையிலும் மனம் உருகி, அறிவு தடுமாறி,நமன் என் உயிரைக் கவர்ந்து செல்ல வரும்போது நான் தனியாகச் செல்லுவது தகுதியோ?
காந்த மலர் போன்ற கையை உடைய மான் பெற்ற வள்ளியின் கணவனே,
யானை போற்றி வளர்த்த தேவசேனையின் மணவாளனே, வேந்தனே, குகனே, வடவேங்கட மலையில் உறைபவனே, வேண்டும் போதெல்லாம் வேண்டுவனவற்றை வெறுக்காமல் கொடுத்து உதவும் பெருமாளே. நான் துணை இன்றி யமனுடன் போதல் தகுமோ?

பார்க்க ஸ்வாமி என்றால் குமார ஸ்வாமியே
திருப்பதி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் கபிலேஸ்வரர் என்ற கோயில் உள்ளது. அங்கு ‘சுப்பிரமணிசுவாமிவாரு’ சன்னதி உள்ளது. அருணகிரியார் அவரைத்தான் ‘வடவேங்கட மாமலை மேவிய பெருமாளே’ என்கிறாறோ?. ‘வடவேங்கடத்துள் உறைபவன் மருகன்’ என்று திருவாஞ்சியம் திருப்புகழில் சொல்வதின் மூலம் அப்படித்தான் எனத்தோன்றுகிறது
திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?
அக்டோபர் 2013ல் கிடைத்த செய்தி
திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா? என்று கேட்ட கேள்விக்கு
‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர்.
‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாகஇருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும்வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம்தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன் குறிஞ்சி நிலக்கடவுளல்லவா?’என்றார் கி.வா.ஜ.. ‘சரி! இதில் உன்னுடைய கருத்து என்ன?’ –என்று கேட்டார் பெரியவர்.
‘பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும்இருந்திருக்க வேண்டும். திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன்கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ.
ஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா?
‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப்படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி.அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது!
திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். முருகன்கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்குவாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. தொண்டை மண்டலத்தில், சக்திக்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும். ஒரு காலத்தில் திருப்பதி,தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. பின்,அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில்ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அதுஇருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும்சொல்வது பொருந்துகிறது’ என்றார்.
பிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில்கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்றுபணித்தார். அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். அதைகி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார். கி.வா.ஜ.வுக்கோ ஒரேபரவசம்.
ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின்பெரியவருக்கும் சாத்தப்பட்டது. இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதைஅவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்?
கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். சரியாக முப்பத்தி ஆறு முழங்கள்இருந்தது. இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். இதற்கென்றேநெசவாள கிராமம் ஒன்று உள்ளது. அவர்களுக்கும் காலம் காலமாகமுப்பத்தாறு முழம்தான் கணக்கு. கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம்இருப்பதைக் கூறினார். உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள்பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்திஆறு தானே?’ என்று கேட்டார். அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும்கணக்கில்… சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகேபுரிந்தது. அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாகபெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி தலமாக தொடரவில்லை என்கிறகேள்வியும் எழுந்தது. பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்:
‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாகமாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. கௌமார சக்திக்கு முருகனையும்,வைஷ்ண விக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். இதில்இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. அவ்வகையில் மாமனேபெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம்.இது ஒரு கோணம்.
அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம்ஜகத்’ என்பது வழக்கு. சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன்.அவனுக்குள் எல்லாமே அடக்கம். அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல்உள்ள ஆலயம்! அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன்அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன்
நன்றி; தீபம் இதழ்
விளக்கக் குறிப்புகள்
தனி போய் விடுவது இயல்போ தான்....
உயிர் போம் அத் தனி வழிக்கே... கந்தர் அலங்காரம்
தனி போய் விடுவது இயல்போ தான்....
உயிர் போம் அத் தனி வழிக்கே... கந்தர் அலங்காரம்