Announcement

Collapse
No announcement yet.

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்ட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • krishnaamma
    replied
    தக்காளித் தொக்கு !

    தக்காளித் தொக்கு !

    தேவையானவை:

    பெங்களூர் தக்காளி 1 கிலோ
    மிளகாய் பொடி 150 - 200 கிராம்
    உப்பு அநேகமாய் 75 - 100 கிராம் போதுமானது
    வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
    மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
    எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
    கடுகு 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல் மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
    ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
    அதில் அறத்த தக்காளியை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
    நன்கு கிளறிவிடவும்.
    மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
    நன்கு கிளறி விடவும்.
    கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
    மீண்டும் நன்கு கிளறி விடவும்.
    எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
    நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
    இதுவும் வருஷத்துக்கும் கெடாது
    சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.

    குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.

    Leave a comment:


  • krishnaamma
    replied
    பீர்கங்காய் துவையல்

    தேவையானவை :

    1/4 கிலோ பீர்கங்காய்
    2 ஸ்பூன் புளி பேஸ்ட்
    10 -12 மிளகாய் வற்றல்
    உப்பு
    கொஞ்சம் எண்ணை
    கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
    2 டீ ஸ்பூன் எள்


    செய்முறை :

    பீர்க்கங்காயை அலம்பி நறுக்கவும்.
    வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
    தனியே வைக்கவும்.
    பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
    கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
    பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
    வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
    அவ்வளவுதான் பீர்கங்காய் துவையல் ரெடி.

    குறிப்பு : எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க பீர்க்கங்காயை கூட்டு செய்யும்போது மீறும் தோலி இல் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல சப்பாத்திக்கு, தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.


    - - - Updated - - -

    தேவையானவை :

    1 கப் துருவின இஞ்சி
    2 ஸ்பூன் புளி பேஸ்ட்
    1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி
    1 டீ ஸ்பூன் பொடித்த வெல்லம்
    2 - 4 மிளகாய் வற்றல்
    உப்பு
    கொஞ்சம் எண்ணை
    கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

    செய்முறை :

    வாணலி இல் எண்ணை விட்டு இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கவும்.
    மிக்சி இல் புளி பேஸ்ட், வெல்லம் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
    தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
    வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
    அவ்வளவுதான் இஞ்சி துவையல் ரெடி.
    வயத்து கோளாறுக்கு கூட இந்த துவையல் ரொம்ப நல்லது

    Leave a comment:


  • krishnaamma
    replied
    புடலங்காய் துவையல்

    தேவையானவை :

    1/4 கிலோ புடலங்காய்
    2 ஸ்பூன் புளி பேஸ்ட்
    1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
    உப்பு
    கொஞ்சம் எண்ணை
    கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
    2 டீ ஸ்பூன் எள்


    செய்முறை :

    புடலங்காயை அலம்பி நறுக்கவும்.
    வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
    தனியே வைக்கவும்.
    பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள
    புடலங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
    கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
    பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
    வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
    அவ்வளவுதான் புடலங்காய் துவையல் ரெடி.

    குறிப்பு : எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க புடலங்காய்யை கூட்டு செய்யும்போது உள்ளே இருக்கும் விதைகளில் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல
    சப்பாத்திக்கு, தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.

    Leave a comment:


  • krishnaamma
    replied
    'தேங்காய் துவையல்'

    தேவையானவை :

    தேங்காய் 1 துருவிக்கொள்ளவும்
    குண்டு மிளகாய் வற்றல் 5 - 6
    புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
    தாளிக்க எண்ணெய் + கடுகு, உளுத்தம் பருப்பு
    உப்பு

    செய்முறை:

    ஒரு வாணலி இல் 1/2 ஸ்பூன் எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை தாளித்து ஒரு பேசினில் கொட்டிக்கொள்ளவும்.
    அதிலிருந்து மிளகாய் வற்றல் ஐ மட்டும் எடுத்துகொண்டு, அத்துடன் தேங்காய் , உப்பு ,புளி பேஸ்ட் போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
    தேவை என்றால் மட்டுமே துளி ஜலம் விடுங்கோ....இல்லாவிட்டால் அப்படியே அரைக்கவும்.
    இதை தாளித்து வைத்ததுடன் கொட்டி கிளறவும்.
    அவ்வளவுதான், சுவையான 'தேங்காய் துவையல்' ரெடி.
    சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
    தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்.
    ரசம் செய்யும் போது இதையும் செய்தால் அட்டகாசம் போங்கள்

    குறிப்பு : என். வி.எஸ். மாமா, எங்க அப்பாவுக்கு அம்மா இந்த துவையல் செய்து தருவா சப்பாத்திக்கு. சப்பத்திமேல தடவி மடித்து கொடுத்திடுவா, மத்யானம் சாப்பிடும்போது மெத் என்றும் இருக்கும் ருசியாவும் இருக்கும் என்று. எனவே , இங்கு சில துவையல்களும் தக்காளி தொக்கும் போடுகிறேன். உங்கள் taste க்கு ஒத்து வருதா பாருங்கோ

    Leave a comment:


  • krishnaamma
    replied
    Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&am

    Originally posted by bmbcAdmin View Post
    பாம்பே சட்னி ஒன்றுதான் செய்து பார்த்தேன்
    அவ்வளவு சரியாக வரவில்லை.

    தப்பாக நினைக்கவேண்டாம் - சிலவற்றின் பெயர் பிடிக்காததால் (ஒரு மாதிரி இருப்பதால்)
    அவற்றை முயற்சிக்கவில்லை.

    டால் அது முன்னமேயெ தெரிந்தது, அது அவ்வளவு இணையாக இல்லை.
    மீண்டும் மாமி ஊரில் இல்லாதபோதுதான் செய்து பார்க்கவேண்டும்
    என்று முன்னமேயே பதில் போட்டிருந்தேன்.
    நன்றி,
    என்.வி.எஸ்
    இதுல தப்பாய் நினைக்க என்ன இருக்கு மாமா, எந்த பேர் பிடிக்கலை உங்களுக்கு, சொல்லுங்கோ பேரை மாத்திடறேன். ...ம்.பார்த்தேன் அந்த திரி இல் சொல்லி இருகீங்க ......போகட்டும் இன்னும் சில போடறேன் பிடிக்கிறதா ...(முதல்ல பேர் பிடிக்கிறதா என்று பாருங்கோ ) பாருங்கோ

    ............ஆமாம் ஒன்று கேட்கவா?......மேலே வெங்காயம் பூண்டு போடாத தளிகை தான் இங்கு போடணும் என்று நீங்க போட்டும் சிலர் அப்படிப்பட்ட குறிப்புகள் போடறாங்களே மாமா?.என்ன பண்ணுவது?

    Leave a comment:


  • bmbcAdmin
    replied
    Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&am

    Originally posted by krishnaamma View Post
    ஏதாவது செய்து பார்த்தேளா மாமா?
    பாம்பே சட்னி ஒன்றுதான் செய்து பார்த்தேன்
    அவ்வளவு சரியாக வரவில்லை.

    தப்பாக நினைக்கவேண்டாம் - சிலவற்றின் பெயர் பிடிக்காததால் (ஒரு மாதிரி இருப்பதால்)
    அவற்றை முயற்சிக்கவில்லை.

    டால் அது முன்னமேயெ தெரிந்தது, அது அவ்வளவு இணையாக இல்லை.
    மீண்டும் மாமி ஊரில் இல்லாதபோதுதான் செய்து பார்க்கவேண்டும்
    என்று முன்னமேயே பதில் போட்டிருந்தேன்.
    நன்றி,
    என்.வி.எஸ்

    Leave a comment:


  • krishnaamma
    replied
    Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&#2

    ஏதாவது செய்து பார்த்தேளா மாமா?

    Leave a comment:


  • R.Varadarajan
    replied
    Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&am

    Respected Swamin,
    I have checked. Is this the one called "Sticky thread?"
    I find Smt.krshnaamma's introduction followed by nine posts which are:

    உருளைக்கிழங்கு கறி
    பயத்தம் பருப்பு டால் '
    Mixed Daal '
    கடி பகோடா'
    பென்கன் கா பர்த்தா
    ஆலு சன்னா
    ஆலு மேத்தி சப்ஜி
    மேத்தி மலாய் மசாலா !
    பாம்பே சட்னி !
    The order is from the latest one going back on time.
    There are no "Replies" only nine posts,+1 introduction. And all similar!
    Is it convenient? The posts can come as new ones so that a reader need not scrawl through the earlier repeated ones. If you go through now you will find the same material occupying the space 10 times, followed my query and your reply and then mine.
    I suggest that the posts be individual,or in the same post as recipe1,recipe2, etc. to avoid the members going thru repettitve appearances.
    Hope you understand . It is only a suggestion to avoid monotony.
    Varadarajan
    Last edited by R.Varadarajan; 11-05-15, 15:34.

    Leave a comment:


  • bmbcAdmin
    replied
    Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&#2

    Sri:
    Dear Sir,
    Kindly check again,
    The title is the same but the contents are found different, so, they are not repetitions.
    Thanks for your care and intimation.
    BMBCADMIN

    Leave a comment:


  • R.Varadarajan
    replied
    Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்&am

    Dear bmbcadmin,
    Why repetition of the same posts so many times? Error in software? Repeated eleven times, and the screeen shows 9 replies? I find no replies.
    Can you explain why it is? Good post but.
    Varadarajan
    Last edited by R.Varadarajan; 11-05-15, 07:36.

    Leave a comment:


  • krishnaamma
    replied
    உருளைக்கிழங்கு கறி

    உருளைக்கிழங்கு கறி

    தேவையானவை :

    500 Gms. உருளைக்கிழங்கு
    2 டீ ஸ்பூன் - மிளகாய் பொடி
    1/2 ஸ்பூன் கடுகு
    1/2 ஸ்பூன் உளுந்து
    1/2 கடலை பருப்பு
    உப்பு
    கொஞ்சம் எண்ணெய்
    மஞ்சள் பொடி கொஞ்சம்

    செய்முறை:

    உப்பு போட்டு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவும்.
    ஆறினதும் , தோலுரித்து, சதுரத்துண்டுகளாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
    வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்கவும்.
    இப்போது வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.
    மெதுவாக கிளறிவிடவும்.
    மிளகாய் பொடி போடவும்.
    கொஞ்சமாய் உப்பு போடவும். ( ஏற்கனவே கிழங்கில் போட்டிருக்கோம் )
    அடுப்பை சிம் இல் வைக்கவும்.
    அது மெல்ல மெல்ல வதங்கட்டும்.
    அப்பப்போ கிளறி விடணும் .
    நன்கு 'மொரு மொரு'பானதும், கறிவேப்பிலை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கிடுங்கோ.
    அருமையான உருளைக்கிழங்கு கறி தயார்.
    இது சப்பாத்தி , பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
    Last edited by krishnaamma; 11-05-15, 00:16.

    Leave a comment:


  • krishnaamma
    replied
    'பயத்தம் பருப்பு டால் '

    தேவையானவை :

    1 கப் பயத்தம் பருப்பு (நன்கு வேக வைக்கவும்.)
    2 பெங்களூர் தக்காளி (விதை நீக்கி நறுக்கி வைக்கவும் )
    4 - 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
    1 உருளைக்கிழங்கு ( வேகவைத்து சிறு துண்டங்களாக்கவும் )
    உப்பு
    கொஞ்சம் எண்ணெய்
    கடுகு , சீரகம் கொஞ்சம்
    மஞ்சள் பொடி கொஞ்சம்
    பெருங்காயம் ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை , கொத்துமல்லி கொஞ்சம்.
    தேவையானால் இஞ்சி துருவியது கொஞ்சம்.

    செய்முறை:

    வாணலி இல் எண்ணெய் விட்டு,கடுகு , சீரகம்,மஞ்சள் பொடி,பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
    நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்கவும்.
    பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளைப்போடவும் .
    நன்கு வதக்கவும்.
    வெந்த பருப்பை இதில் கொட்டவும.
    கொஞ்சம்கொதித்ததும் உப்பு போடவும்.
    பிறகு கறிவேப்பிலை , கொத்துமல்லி தூவி இறக்கவும்.
    'பயத்தம் பருப்பு டால் ' தயார். சப்பாத்தி க்கு ரொம்ப நல்லா இருக்கும்.

    குறிப்பு: உருளைக்கிழங்கு வேண்டாதவா தவிர்க்கலாம் .

    Leave a comment:


  • krishnaamma
    replied
    'Mixed Daal '

    தேவையானவை :

    1 டேபிள் ஸ்பூன் பயத்தம் பருப்பு
    1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
    1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
    1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
    4 - 5 பச்சை மிளகாய் (இரண்டாக நறுக்கவும் )
    உப்பு
    2 டேபிள் ஸ்பூன் நெய்
    1 டீ ஸ்பூன் கடுகு ,
    1 டேபிள் ஸ்பூன் சீரகம் கொஞ்சம்
    மஞ்சள் பொடி கொஞ்சம்
    கறிவேப்பிலை , கொத்துமல்லி கொஞ்சம்.
    1 டேபிள் ஸ்பூன் இஞ்சி துருவியது
    2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

    செய்முறை:

    எல்லா பருப்புகளையும் ஒன்றாக போட்டு, நன்கு களைந்து குக்கரில் வைக்கவும்.
    மூன்று நான்கு விசில் வரட்டும்.
    வாணலி இல் நெய் விட்டு,கடுகு , சீரகம்,மஞ்சள் பொடி, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
    கடைந்த ,வெந்த பருப்பை இதில் கொட்டவும.
    கொஞ்சம்கொதித்ததும் உப்பு போடவும்.
    தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
    பிறகு கறிவேப்பிலை , கொத்துமல்லி தூவி இறக்கவும்.
    கொஞ்சம் ஆறினதும் எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
    'Mixed Daal ' தயார். சப்பாத்திக்கு ரொம்ப நல்லா இருக்கும்.


    Leave a comment:


  • krishnaamma
    replied
    'கடி பகோடா'

    தேவையானவை :

    1 1 /2 கப் கடலை மாவு
    2 ஸ்பூன் மிளகாய் பொடி
    அரை ஸ்பூன் ஓமம்
    ஒரு சிட்டிகை பெருங்கயப்பொடி
    கால் ஸ்பூன் சோடா உப்பு
    2 கப் திக்கான மோர்
    அரை ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயப்பொடி
    அல்லது காய்ந்த வெந்தய கீரை
    கறிவேப்பிலை
    உப்பு
    பொரிக்க எண்ணெய்

    செய்முறை:


    முதலில் ஒரு பேசினில் பாக்கி ஒரு கப் கடலை மாவை போட்டு, ஓமம், சோடா உப்பு, கொஞ்சம் மிளகாய் பொடி, உப்பு போடவும்.
    தண்ணீர் விட்டு பகோடா மாவு போல கரைக்கவும்.
    ஒரு பக்கமாய் வைக்கவும்.
    மோரை நன்கு குழப்பவும்.
    உப்பு, அரை கப் கடலை மாவு, கொஞ்சம் மிளகாய் பொடி, வெந்தய பொடி அல்லது பொடித்த வெந்தய கீரை போட்டு நன்கு கலக்கவும்.
    மாவு கட்டி தட்டாமல் நன்கு கலக்கவும்.
    வாணலி இல் எண்ணெய் துளிவிட்டு கொஞ்சம் ஓமம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.
    கரைத்த மோரை அதில் விடவும்.
    அது கொதிக்கட்டும். இது தான் 'கடி'
    வாணலி இல் எண்ணெய் வைக்கவும்.
    சூடான எண்ணெய் இல் கரைத்து வைத்துள்ள மாவை எடுத்து பக்கோடாக்கள் போல போடவும்.
    நல்ல பவுன் நிறத்தில் எடுத்து , கொதித்துக்கொண்டிருக்கும் 'கடி' இல் போடவும்.
    இது போல எல்லா மாவும்ஆகும் வரை செய்யவும்.
    பக்கோடாக்கள் மொத்தமும் போட்டதும் ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
    பிறகு 'கடி பகோடாவை' அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
    இது ஒரு ராஜஸ்த்தானி டிஷ் , சப்பாத்திக்கு பூரிக்கு ரொம்ப நன்னா இருக்கும்.
    Last edited by krishnaamma; 10-05-15, 23:16.

    Leave a comment:


  • krishnaamma
    replied
    பென்கன் கா பர்த்தா

    பென்கன் கா பர்த்தா அதாவது கத்தரிக்காய் கொத்சு

    தேவையானவை :

    ஒரு பெரிய குண்டு கத்தரிக்காய்
    ஒரு பெரிய பெங்களூர் தக்காளி
    பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய இஞ்சி அரை ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
    பொடித்த சீரகம் அரை ஸ்பூன்
    பொடித்த 'கரம் மசாலா' அரை ஸ்பூன்
    மிளகாய் பொடி
    மஞ்சள் பொடி
    ஒரு சிட்டிகை பெருங்காயப்பொடி
    எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் (தேவையானால் )

    தாளிக்க:

    கடுகு
    சீரகம்

    உப்பு தேவையான அளவு
    எண்ணெய் கொஞ்சம்

    செய்முறை :

    கத்தரிக்காயை நன்கு அலம்பி, துடைக்கவும்.
    கொஞ்சம் எண்ணெய் தடவவும்.
    காஸ் ஸ்டவ் இல் நெருப்பில் காட்டி சுடவும்.
    எல்லா பக்கமும் நன்கு சுட திருப்பி விடவும்.
    நன்கு வெந்ததும், ஒரு பெரிய பேசினில் தண்ணீர் விட்டு இத போடவும்.
    ஆறினதும் தோலை எடுக்கவும்.
    கையால் நன்கு பிசையவும்.
    வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
    பிறகு இஞ்சி , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
    நறுக்கின தக்காளி போடவும். பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி போடவும்.
    நன்கு வதக்கவும்.
    மிளகாய் பொடி, சிரகப்பொடி, மஞ்சள் பொடி, பொடித்து வைத்த கரம் மசாலா பொடி என எல்லாம் போடவும்.
    உப்பு போடவும்.
    அது நன்கு வதங்கினதும், கத்தரிக்காயை போடவும்.
    அரை கப் தண்ணீர் விடவும்.
    நன்கு கொதிக்கும் வரை அடுப்பில் இருக்கட்டும்.
    அப்ப அப்ப கிளறி விடவும்.
    கொத்துமல்லி தூவி இறக்கவும் .
    தேவையானால் கொஞ்சம் ஆறினதும் எலுமிச்சை சாறு விடவும்.
    சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.

    கரம் மசாலா பொடி :கொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.

    Leave a comment:

Working...
X