
கன்னியாகுமரியில் குவிந்த கூட்டம் இதேபோல் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர். இதேபோல் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவருகிறது. விழாவையொட்டி ஏரல் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் தாமிபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தாமிரபரணியில் குவிந்த கூட்டம் பாபநாசம் கோவிலிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி படித்துறையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருச்செந்தூரில் நீராடல் நெல்லையில் குறுக்குத்துறை கோவில், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேதாரண்யத்தில் குவிந்த பக்தர்கள் இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் முன்னோர்களுக்கு எள்ளும், அரிசியும் வைத்து திதி கொடுத்து வழிபட்டனர்.