பதிவு செய்த நாள்
05 ஏப்
2014
20:06

'மகராஜன், புண்ணியவான்... நல்லா இருக்கட்டும்!' என, தொழிலதிபர்களும், வர்த்தகர்களும் ஒருவரை வாழ்த்துகின்றனர். புதிதாகப் பதவியேற்கப் போகும் நபர் அல்ல அவர்; பதவியில் இனி தொடர மாட்டார் என்ற நம்பிக்கையால் வாழ்த்துக்களைப் பெறுகிறார்.
இதோ, நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள்.
ப.சிதம்பரம் பதவியில் இருந்தால் தளர்ச்சி; அவர் இல்லாவிட்டால் வளர்ச்சி என்ற வினோத நிலையை, நாடு எதிர்க்கொள்ளும்போது, அவர் எப்படி பதில் சொல்வார்? ஆனால், தேசம் அவருக்கு பதில் சொல்லும்.
E-mail: hindunatarajan@hotmail.com
ஆர்.நடராஜன்கட்டுரையாளர், அமெரிக்கத் துாதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்
05 ஏப்
2014
20:06

'மகராஜன், புண்ணியவான்... நல்லா இருக்கட்டும்!' என, தொழிலதிபர்களும், வர்த்தகர்களும் ஒருவரை வாழ்த்துகின்றனர். புதிதாகப் பதவியேற்கப் போகும் நபர் அல்ல அவர்; பதவியில் இனி தொடர மாட்டார் என்ற நம்பிக்கையால் வாழ்த்துக்களைப் பெறுகிறார்.

Notice
அது ஒரு, ஆலய நகரப் பல்கலைக் கழகம். அங்கே, ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர், ஒரு ஆங்கிலேயர். ஓய்வு பெறும் அவருக்கு, வழியனுப்பும் விழா நடத்த, கல்லுாரிகளின் ஆங்கில ஆசிரியர்கள், ஆளுக்கு ஐந்து ரூபாய் பணம் திரட்டினர். ஒரு இணை பேராசிரியர், 'பத்து ரூபாயாகத் தருகிறேன். அந்த மனுஷனைத் திரும்பி வரச் சொல்லாதே' என்றார். 'ஏன் சார்?' என்று கேட்டதற்கு, ஷேக்ஸ்பியரின், 'ஜூலியஸ் சீசர்' நாடகத்தின் முக்கிய வசனமான, 'மனிதன் செய்யும் கேடுகள், அவன் காலத்திற்குப் பிறகும் தொடர்கின்றன' என்பதை, எடுத்துச் சொன்னார்.

Information
தமிழகத்தில், ஒரு ஜாதியினர் கணக்கு வழக்கு வைத்திருக்கும் முறையை, 'ஐந்தொகை' என்பர். கணக்காயர்கள் சொல்லும், 'புக் கீப்பீங், பேலன்ஸ் ஷீட்' எல்லாம் இதில் அடங்கும். மிகச் சரியான பற்று வரவுக் கணக்கு முறை. அந்தப் பின்னணியில் வந்த நம்மூர் மகராஜனுக்கு, கணக்கு வழக்கு புரியாமல் போகுமா? கணக்கு புரியும்; வழக்கும் புரியும்... வக்கீல் அல்லவா?அவர் சொல்லிக் கொள்ளாத சாதனைகளை, கேள்விகளாக பிட்டுப்பிட்டு வைத்து விட்டார், அவருக்கு முன் பா.ஜ., ஆட்சியில், நிதி அமைச்சராக இருந்த, மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி யஷ்வந்த் சின்கா. உடனே, 'சின்காவின் கேள்விகள் அசட்டுத்தனமானவை. அவ்வையார் காலத்து ஆசாமிக்கு, அம்மையார் காலப் பொருளாதாரம் புரியாது' என்றபடி மேலும், என்னென்னவோ சொன்னார். அதனாலென்ன... அவற்றை அலசிப் பார்க்க வேண்டியது யஷ்வந்த் சின்காவின் வேலை.பின் ஏன் நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சொதப்பினார்? இப்போது புரிந்ததா, நான் யாரைச் சொல்கிறேன் என்று? ஆம்... ப.சிதம்பரம் தான்!
இதோ, நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள்.


*மூன்று முறை நிதி அமைச்சராக இருந்தீர்களே... ஒவ்வொரு முறையும் முன்பைவிட மோசம் என்ற அளவுக்கு, நிதி நிலைமை பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு, நீங்களே காரணம் என்பதை ஒப்புக்கொள்வீர்களா? நீங்கள் இல்லையென்றால் வேறு யார்? கடைசியாக யஷ்வந்த் சின்கா கேட்டது, அதாவது 18வது கேள்வி, ஒரு கேள்வி அல்ல, அது கிண்டல் கலந்த நிஜம்.
*நீங்கள் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்பது தெரிந்ததுமே, பங்குச் சந்தை உற்சாகம் பெற்றது. பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. நீங்கள் பொறுப்பில் இல்லாவிட்டால், நிலைமை சீராகும் என்றால், நீங்கள் பொறுப்பில் இருந்து என்ன பயன்?இப்படிப் பொட்டில் அறைந்தால்போல் கேட்டிருக்கிறார், யஷ்வந்த் சின்கா.
*நீங்கள் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்பது தெரிந்ததுமே, பங்குச் சந்தை உற்சாகம் பெற்றது. பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. நீங்கள் பொறுப்பில் இல்லாவிட்டால், நிலைமை சீராகும் என்றால், நீங்கள் பொறுப்பில் இருந்து என்ன பயன்?இப்படிப் பொட்டில் அறைந்தால்போல் கேட்டிருக்கிறார், யஷ்வந்த் சின்கா.
ப.சிதம்பரம் பதவியில் இருந்தால் தளர்ச்சி; அவர் இல்லாவிட்டால் வளர்ச்சி என்ற வினோத நிலையை, நாடு எதிர்க்கொள்ளும்போது, அவர் எப்படி பதில் சொல்வார்? ஆனால், தேசம் அவருக்கு பதில் சொல்லும்.
E-mail: hindunatarajan@hotmail.com
ஆர்.நடராஜன்கட்டுரையாளர், அமெரிக்கத் துாதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்